ரணில் பெரிய நரியர், தந்திரக்காரர், மூளைசாலி, பலசாலி என்றெல்லாம் கூறினார்கள்
ரணில் பெரிய நரியர், தந்திரக்காரர், மூளைசாலி, பலசாலி என்றெல்லாம் கூறினார்கள். அவருக்கு பின் உலகமே இருக்கின்றது, ரணில் மீது கை வைக்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், நாங்கள் அவர் மீது கை வைக்கவில்லை. இந்நாட்டிலுள்ள நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ரணில் மாத்திரமல்ல இன்னும் பலர் உள்ளே செல்ல இருக்கின்றனர். தங்களுடைய அப்பாவின் சொத்து என நினைத்து, மக்களுடைய 166 இலட்சத்தை வீணடித்துள்ளனர். அதனுடைய விளைவாகவே அவர் கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இதுவரை இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் உயரத்தில் இருப்பவர்கள், மேட்டுக்குடிகள், அவர்களிடையே நெருங்க முடியாது எனக் கூறப்பட்டது. இதுநாள் வரை நாட்டின் சட்டத்தை இந்த நாட்டிலுள்ள மேட்டுக்குடிகள் தங்களுடைய பைகளுக்குள் வைத்திருந்தனர். ஆனால், இன்று நீதித்துறை சுயாதீனமாக இயங்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளது. நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கான அனுமதி மற்றும் சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். மக்களுடைய பணத்தை கொள்ளையடித்தது யாராக இருந்தாலும், அவர்களுடைய தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கையின் ஒன்றாகவே, முழு நாட்டில் இருக்கின்ற பழைய அரசியல்வாதிகள், நாட்டில் கொள்ளையடித்தவர்கள் என எல்லோரும் நடுங்குகின்ற அல்லது அச்சமடைகின்ற ஒரு கைதாகவே இந்த ரணில் விக்கிரமசிங்கவின் கைது அமைந்துள்ளது.
(அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்)

Post a Comment