Header Ads



போதைப்பொருள் கடத்தல்காரனின் 100 மில்லியன் மதிப்புள்ள 5 மாடிக் கட்டிடத்தை கைப்பற்றிய CID


குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைப்பற்றியுள்ளது. 

போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த பணத்தில் தெமட்டகொட ருவான் இந்தக் கட்டிடத்தை வாங்கியது தெரியவந்ததை அடுத்து, அந்தக் கட்டிடத்தை CIDயின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (IAD) கைப்பற்றியது. 


சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக தெமட்டகொட ருவான், அவரது மனைவி, அவரது சகோதரி மற்றும் அவரது மகன் மீது சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (IAD) முன்பு வழக்குப் பதிவு செய்திருந்தது. 


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்த நீண்டகால விசாரணைகளின் பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.