ஆபாச வார்த்தைகளால் திட்டியதற்காக கைது
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் நேற்று திங்கட்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை, தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை (15) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment