ஜூலை 20 முதல் சைப்ரஸில் இலங்கை தூதரகம்
சைப்ரஸில் தற்போது சுமார் 15,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள இலங்கையர்களுக்கு இராஜதந்திர சேவைகளை வழங்குவதற்காக ஜூலை 20 முதல் சைப்ரஸில் இலங்கை தூதரகம் ஒன்றை நிறுவ வெளியுறவு அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், சைப்ரஸில் வசிக்கும் இலங்கையர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே அங்குள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. அலுவலகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சமூகத்திற்கு சேவைகள் வழங்கப்படும், வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தவும், வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Post a Comment