இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறைத் தலைவர் படுகொலை
இஸ்ரேலிய தாக்குதலில் ஞாயிற்றுக்கிழமை (16) ஈரானின் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் முகமது கசெமி மற்றும் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் அதிகாரப்பூர்வ IRNA செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
“மூன்று உளவுத்துறை ஜெனரல்கள், முகமது கசெமி, ஹசன் மொஹாகேக் மற்றும் மொஹ்சென் பகேரி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு தியாகிகளாக வீழ்ந்தனர்,” என்று புரட்சிகர காவல்படை அறிக்கையை மேற்கோள் காட்டி அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment