NPP பக்கம் சாய்கிறார் ஜீவன்
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான NPP யால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது
இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களை மீண்டும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று NPP, இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட NPP யுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக ஜீவன் தொண்டமான் கூறினார்.
Post a Comment