Header Ads



கத்தாரில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் உயிரிழப்பு


கத்தாரில் இந்தியர்கள் சிலர், ஹஜ் விடுமுறையினை முன்னிட்டு, கென்யாவுக்கு சென்றனர். இந்நிலையில் சுற்றுலா சென்ற 28 பேர் அடங்கிய இந்தியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கென்யாவில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் முதல்கட்ட தகவல்படி 5 பேர் உயிரிழந்தனர், 26 பேர் வரையில் காயமடைந்தனர். 


வடகிழக்கு கென்யாவின் நியாண்டருவா பகுதியில் உள்ள நியாஹுருருவில் உள்ள பனாரி ரிசார்ட்டுக்குச் சென்ற பேருந்து, திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து 100 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் பேருந்து இரண்டு துண்டானதாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 


இறந்தவர்களில் 3 பெண்கள், இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர்.  மாவேலிக்கரையைச் சேர்ந்த கீதா ஷோஜி(58), ஜஸ்னா(29), ருஹி மெஹ்ரின் முகமது(18 மாதங்கள்), ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த ரியா (41), டைரா ரோட்ரிக்ஸ்(😎. சம்பவம் குறித்து கெனியா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த ரியா மற்றும் டைரா இருவருடைய உடல்களும் அவருடைய கணவருடைய(ஜோயல்) ஊரான கோயம்புத்தூர் கொண்டு செல்லப்படும் என்று தெரியவந்துள்ளது.

ARAB TAMIL DAILY-TEAM

No comments

Powered by Blogger.