Header Ads



ருஷ்தியின் கைது, மனித உரிமை மீறல் - நஷ்டயீடு செலுத்த மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை


மொஹம்மட் லியா­உத்தீன் மொஹம்மட் ருஷ்தி. நிட்­டம்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வசிக்கும் 22 வய­தான இந்த இளை­ஞனைக் கைது செய்­தமை, பின்னர் நிபந்­தனை அடிப்­ப­டையில் விடு­வித்­தமை ஆகி­யன மனித உரி­மை­களை மீறும் செயல் என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு கடந்த வாரம் அறி­வித்­தது.


கொம்­பனித் தெரு பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள சிட்டி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்­டி­டத்­தொ­கு­தியில் அமைந்­துள்ள ஸ்பா சலூன் எனும் வர்த்­தக நிலை­யத்தில் சேவை­யாற்­றிய குறித்த இளை­ஞனை கடந்த மார்ச் 22 ஆம் திகதி அந்த வர்த்­தக நிலை­யத்­துக்குள் வைத்து கைது செய்த பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு, 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரித்த பின்னர் எந்த குற்றச்சாட்டும் சுமத்­தாமல் விடு­வித்­தது. குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் இல்­லாத போதும் ருஷ்தி பல்­வேறு நிபந்­த­னை­களின் கீழ் மத்­தி­யி­லேயே அத்­த­ன­கல்ல நீதிவான் முன் ஆஜர் செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார்.


இந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் எல்.ரி.பி. தெஹி­தெ­னிய தலை­மையில் அதன் உறுப்­பி­னர்­க­ளான சட்­டத்­த­ரணி நிமல் ஜி புஞ்­சி­ஹேவா, பேரா­சி­ரியர் பாத்­திமா பர்­சானா ஹனீபா, பேரா­ச­ிரியர் தைய­முத்து தனராஜ், கலா­நிதி கிஹான் குண‌­தில ஆகிய ஐவர் கொண்ட ஆணை­யாளர் குழு, ருஷ்­தியின் அடிப்­படை மனித உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்து பல்­வேறு பரிந்­து­ரை­களை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வுக்கும் அர­சுக்கும் அளித்­துள்­ளது.


அதன்­படி “பிர­தி­வா­திகள் (பயங்­கர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரிவின் பணிப்­பாளர் உள்­ளிட்ட ஐவர்) தங்கள் நிர்­வாக நட­வ­டிக்­கைகள் மூலம் பாதிக்­கப்­பட்­ட­வரின் (ருஷ்­தியின்) அர­சி­ய­ல­மைப்பின் 14(1)(a), 10, 13(1), 13(2), 13(5), 14(1)(h), 14(1)(g), 12(1) மற்றும் 12(2) ஆகிய உறுப்­பு­ரைகள் ஊடாக‌ உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மை­க­ளான, அதா­வது கருத்து சுதந்­திரம், சிந்­தனை சுதந்­திரம், மன­சாட்சி மற்றும் மத சுதந்­திரம், தன்­னிச்­சை­யான கைதில் இருந்து விடு­ப­டு­வ­தற்­கான மற்றும் தடுப்­புக்­கா­வலில் இருந்து விடு­ப­டு­வ­தற்­கான‌ சுதந்­திரம், நிர­ப­ராதி என்று கருதும் உரிமை, நாட்டில் எந்­த­வொரு பகு­திக்கும் பயணம் செய்ய முடி­யு­மான‌ சுதந்­திரம், சட்­ட­பூர்­வ­மான ஒரு வேலையில் ஈடு­படும் சுதந்­திரம், பாகு­பாடு காட்­டப்­ப­டாது சமத்­து­வ­மாக நடாத்­த­ப்படு­வதை உறுதி செய்­வ­தற்­கான உரி­மை­களை மீறி­யுள்­ளனர்’ என மனித உரி­மைகள் ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது.


ருஷ்­தியை விடு­விக்க‌ விதிக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னைகள்:

ருஷ்தி தற்­போது வசிக்கும் …….. நிட்­டம்­புவ எனும் முக­வ­ரியில் வசிக்க வேண்டும்.

வீட்­டி­லி­ருந்து வெளி­யேறும் போதும் மீள வீட்­டுக்கு வரும் போதும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­விக்க வேண்டும்.

சிலவேளை நிரந்­தர வதி­வி­டத்தை மாற்­று­வ­தானால் அது குறித்து பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­விக்க வேண்டும்.

வெளி­நாடு செல்ல விரும்­பினால், அது தொடர்பில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பா­ளரின் அனு­ம­தியை பெற வேண்டும்.


ஒவ்­வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு கோட்­டையில் உள்ள பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ராக வேண்டும்.


அழைப்­பொன்று கிடைக்கும் பட்­சத்தில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி முன்­னி­லையில் 72 மணி நேரத்­துக்குள் ஆஜ­ராக வேண்டும்.

நீதி­மன்ற அறி­வித்தல் கிடைத்தால் உட­ன­டி­யாக அதன்­படி மன்றில் ஆஜ­ராக வேண்டும்.

அடிப்­ப­டை­வாத, பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கைகள், தனி நபர்­க­ளு­ட­னான நட­வ­டிக்­கைக‌ள் தொடர்­பு­களில் இருந்து தவிர்ந்­தி­ருத்தல் வேண்டும்.


இந்த நிபந்­த­னை­களின் கீழேயே ருஷ்தி இருந்து வரும் நிலையில், ருஷ்­தியின் சார்பில் அவ­ரது பெற்­றோரும், மனித உரி­மைகள் ஆணைக் குழு சுயா­தீ­ன­மா­கவும் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் முடிவில் பின்­வ­ரு­மாறு வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது.


ஆணைக் குழுவின் முடிவு:

“இந்த முறைப்­பாட்டின் விட­யங்கள் மற்றும் சூழ்­நி­லை­களை ஆராய்ந்­ததன் பின்னர், பாதிக்­கப்­பட்­ட­வரின் (ருஷ்­தியின்) அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தற்கு பிர­தி­வா­தி­களும் ஒரு நிறு­வனம் என்ற ரீதியில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவும் கூட்டுப் பொறுப்­பேற்க வேண்டும் என ஆணைக் குழு கரு­து­கி­றது. ஆணைக் குழுவின் பார்­வையில், அந்த மீறல்­க­ளுக்கு தனிப்­பட்ட அதி­கா­ரி­களின் செயல்­களை மட்டும் காரணம் காட்ட முடி­யாது. எனினும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் நிறு­வன மட்ட‌ மற்றும் கொள்கை ரீதி­யி­லான குறை­பா­டுகள் மற்றும் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் தவ­றான விளக்­கங்கள் இந்த உரிமை மீற‌­லுக்கு நேர­டி­யாக செல்­வாக்கு செலுத்­தி­யுள்­ளது.” என ஆணைக் குழுவின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.


அதன்­படி இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு 30 பக்க நீண்ட அறிக்­கையை வெளி­யிட்­டுள்ள நிலையில் அத­னூ­டாக பயங்­கர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு பணிப்­பாளர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கு தனித்­தனி பரிந்­து­ரை­களை முன் வைத்­துள்­ளது.


பின்­னணி:

உண்­மையில் ருஷ்தி பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக அல்­லது இஸ்­ரே­லுக்கு எதி­ராக ‘பக் இஸ்ரேல்’ எனும் ஸ்டிக்­கரை ஒட்­டி­ய­மையை மையப்­ப‌­டுத்தி கைது செய்­யப்­பட்டார். இது தொடர்பில் நாம் முன்னர் இரு சந்­தர்ப்­பங்­களில் விரிவாக எழு­தி­யி­ருந்தோம். கைது தொடர்பில் சி.ரி.ஐ.டி. முறை­யாக அவ்­வி­ளை­ஞனின் பெற்­றோ­ருக்கு அறி­வித்­தி­ருக்­காத நிலையில் 24 மணி நேரத்தின் பின்­ன­ரேயே தொலை­பே­சியில் அழைத்து, கடந்த மார்ச் 23 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வரு­மாறு பெற்­றோ­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.


அதன் பின்னர் விசா­ர­ணைக்கு சென்ற‌ பெற்­றோரை விசா­ரித்த பின்னர் அவர்­களை ஜீப்பில் ஏற்றி, நிட்­டம்­புவ பகு­தியில் உள்ள அவர்­க­ளது வீட்­டுக்கு அழைத்து வந்து வீட்டை முற்­றாக சோதனை செய்­துள்­ளனர்.


இப்­ப­டித்தான் இவ்­வி­சா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னது. அதன் பின்னர் இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் பாது­காப்பு அமைச்சர் என்ற‌ ரீதியில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­விடம் இருந்து தடுப்புக் காவல் உத்­த­ரவை (MOD/LEG/PTA/21/2025) பெற்­றுக்­கொண்­டுள்ள சி.ரி.ஐ.டி. யினர் அதன் பிர­காரம் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசா­ரித்­தனர்.


இத­னி­டையே, இந்த கைது விவ­காரம் பொது மக்­க­ளி­டையே சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­திய பின்னர், குழப்­ப­ம­டைந்த சி.ரி.ஐ.டி.யினர் குறித்த இளை­ஞனை சி.ரி.ஐ.டி.யினர் எவ்­வா­றா­யினும் ஏதேனும் குற்­ற‌ச்­சாட்டு ஒன்­றுக்குள் தள்ள பல முயற்­சி­களை முன்­னெ­டுத்­தனர். இத­னை­விட, பெற்றோர் நீதி­மன்ற, ஏனைய நிவா­ர­ணங்­களை பெறு­வதை தவிர்ப்­ப­தற்­காக பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள் பொய் வாக்­கு­று­தி­க­ளையும் கொடுத்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணையின் முடிவில் இது குறித்த அத்­தனை விடயங்­களும் கருத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்றது. அவ்­வாணைக் குழு முன்வைத்­துள்ள பரிந்து­ரை­களை பார்க்கும் போது அது தெளி­வா­கி­றது.


இதில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பா­ள­ருக்கு 9 பரிந்து­ரை­க­ளையும் பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு 2 பரிந்து­ரை­க­ளையும் முன் வைத்­துள்ள ஆணைக் குழு, பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­ல­ருக்கும் பரிந்து­ரை­களை முன்வைத்து, ருஷ்­திக்கு 2 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்­து­மாறும் அறி­வித்­துள்­ளது.

பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­ன­ாய்வுப் பிரி­வுக்­கான பரிந்­து­ரைகள்:


1. பயங்­க­ர­வாதத் தடை சட்­டத்தின் பிரிவு 11(1) ஆல் அனு­ம­திக்­கப்­ப­டா­ததால், கடந்த 2025 ஏப்ரல் 7 அன்று பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு (ருஷ்­திக்கு) எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்ட விடு­விப்பு நிபந்­த­னை­களை தளர்த்­து­வ­தற்கு பாது­காப்பு அமைச்­ச­ருக்கு உட­ன­டி­யாக பரிந்­து­ரைக்க வேண்டும்.

2. பயங்­க­ர­வாதத் தடை சட்­டத்தின் பிரிவு 2(1)(h) இன் கீழ் ஒரு குற்­றத்­திற்­காக அல்­லது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வது தொடர்­பான குற்­றச்­சாட்டில் எந்­த­வொரு சந்­தேக நப­ரையும் கைது செய்­வ­தற்கு முன்பு பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்­பாளர் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ள‌த்­திடம் இருந்து ஆலோ­சனை பெறு­வ­தற்­கான நடை­முறை ஒன்றை நிறு­வுதல்.

3. இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13(2) உறுப்­பு­ரையின் படி, கைது செய்­யப்­பட்ட ஒரு­வரை 72 மணி நேரத்­திற்குள் நீதிவான் முன் ஆஜர்­ப­டுத்­து­வ­தற்­கான நிலை­யான நடை­மு­றையை நிறு­வுதல்

4. இந்தச் சம்­பவம் தொடர்­பான ஆணைக் குழுவின் அவ­த­ானிப்­புக்கள் மற்றும் பரிந்­து­ரை­களின் நகலை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் அனைத்து அதி­கா­ரி­க­ளுக்கும் வழங்க வேண்டும். அவற்றைப் படித்துப் புரிந்­து­கொள்­ளவும் அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­படல் வேண்டும்.

5. ஒரு­வரை கைது செய்­ததும், அதே நாளில் அச்­சந்­தேக நபரின் நெருங்­கிய உற­வி­னர்­க­ளுக்கு கைது பற்றுச் சீட்டை வழங்க எழுத்­து­பூர்வ, தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை பயங்­கர­வாத தடுப்பு மற்றும் புல­னா­ய்வுப் பிரிவின் அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­குதல்.

6. பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் அனைத்து அதி­கா­ரி­களும், பொலிஸ் நிலையம் போன்ற உத்­தி­யோ­க­பூர்வ‌ இடத்தைத் தவிர வேறு எந்த இடங்­களில் வைத்தும், சந்­தேக நபர் ஒரு­வரின் நெருங்­கிய உற­வி­னர்­களைச் சந்­திப்­ப­தையோ அல்­லது தொடர்பு கொள்­வ­தையோ தவிர்க்­கு­மாறு எழுத்­து­பூர்வ, தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை வழங்­குதல் வேண்டும்.

7. கடந்த 2022 பெப்ர­வரி 14 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் வெளி­யிட்ட RTM CRTM- 231 எனும் இலக்­கத்தை உடைய சுற்று நிருபம் பத்­தி­ரிகை மற்றும் வானொ­லிக்கு தக­வல்­களை வழங்­குதல் குறித்த இலங்கை பொலி­ஸாரின் எண். D5 எனும் கட்­டளை ஆகி­ய­வற்றை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­க­ளுக்கு மீண்டும் விநி­யோ­கிக்­கவும். மேலும் சந்­தேக நபர் அல்­லது விசா­ர­ணைகள் பற்­றிய பார­பட்­ச­மான தக­வல்­களை ஊட­கங்­க­ளுக்கு வழங்­கு­வதைத் தவிர்க்­கு­மாறு அனைத்து உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் உத்­த­ர­வி­டவும்.

8. ‘இன அடை­யா­ளங்­களை’ வெளிப்­ப‌­டுத்­து­வதை தவிர்க்­கவும், சந்­தேக நபரின் இன, மத பின்­ன­ணியை விசா­ர­ணை­களின் போது அநி­யா­ய­மாக கருத்­திற்­கொள்­வதை தவிர்க்­கு­மாறும் நியா­யத்தை மட்டும் கருத்தில் கொண்டு விசா­ரணை செய்­யு­மாறும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரிவின் அதி­கா­ரி­க­ளுக்கு தெளி­வான, எழுத்து மூல ஆலோ­ச­னை­களை வழங்­குதல்

9. சந்­தேக நபரின் ‘மன நிலை’ அல்­லது பிற உள­வியல் கார­ணிகள் விசா­ர­ணை­யுடன் தொடர்­பு­டை­ய­தாக இருந்தால், விசா­ர­ணையைத் தொடர்­வ­தற்கு முன்பு குற்­ற­வியல் உள­வியல், மன­நல மருத்­துவம் அல்­லது இதே போன்ற துறையில் பயிற்சி பெற்ற ஒரு சுயா­தீன நிபு­ண­ரி­ட­மி­ருந்து அறிக்கை பெறப்­பட வேண்டும் என பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் அனைத்து அதி­கா­ரி­க­ளுக்கும் எழுத்­து­பூர்வ, தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை வழங்­குதல். ஏதேனும் மன­நலப் பிரச்­சி­னைகள் அடை­யாளம் காணப்­பட்டால், சந்­தேக நபர் உட­ன­டி­யாக ஒரு சட்ட வைத்­திய‌ அதி­கா­ரியால் பரி­சோ­திக்­கப்­பட வேண்டும். அத்­துடன் சட்ட வைத்­திய‌ அதி­காரி பரிந்­து­ரைத்தால், சந்­தேக நபர் தேவை­யான சிகிச்­சைக்­காக பொருத்­த­மான நிறு­வ­னத்தின் பரா­ம­ரிப்பில் வைக்­கப்­பட வேண்டும்.


பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்­கான பரிந்­து­ரைகள் :

1. பயங்­க­ர­வாதம் தொடர்­பான குற்­றங்கள் குறித்து விசா­ரணை நடத்­தும்­போது ‘நியா­ய­மான சந்­தேகம்’ என்ற தர­நிலை குறித்து சட்­டமா அதி­ப­ருடன் கலந்­தா­லோ­சித்து தெளி­வான வழி­காட்­டு­தல்­களை நிறுவ வேண்டும். அத்­த­கைய வழி­காட்­டு­தல்கள் கடந்த 2019 ஜூலை 2 ஆம் திகதி அப்­போ­தைய பொலிஸ் மா அதி­ப­ருக்கு வழங்­கப்­பட்ட மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் வழி­காட்­டு­தல்­க­ளுடன் முழு­மை­யாக ஒத்­துப்­போக வேண்டும். அத்­த­கைய வழி­காட்­டு­தல்கள் குறித்து பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வுக்கு தேவை­யான பயிற்­சியை வழங்க உட­னடி நட­வ­டிக்­கை­களை எடுக்­கப்­படல் வேண்டும்.


2. மேற்­கண்ட பரிந்­து­ரை­களை முழு­மை­யாக செயல்­ப­டுத்த முதல் பிர­தி­வா­திக்கு (பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர்) தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்­கவும்.


பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­ல­ருக்­கான பரிந்­துரை:

சட்­ட­பூர்­வ­மான வேலையில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் மீற‌ப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்டவருக்கு (ருஷ்திக்கு) ஏற்பட்ட பாரபட்சத்தை நிவர்த்தி செய்யும் வகையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கூட்டுப் பொறுப்பை மையப்படுத்தி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பாதிக்கப்பட்டவருக்கு (ருஷ்திக்கு) இரண்டு லட்சம் ரூபா (ரூ.200,000/-) தொகையை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.


மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் 15(7) ஆம் அத்தியாயம் படி, 2025 ஜூலை 15 அல்லது அதற்கு முன்னர் இந்த அனைத்து பரிந்துரைகளையும் அமுல் செய்யுமாறும், இந்த பரிந்துரைகளை அமுல் செய்வது குறித்த விடயங்களை ஆணைக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் முதல் பிரதிவாதிக்கும் (பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பணிப்பாளர்), பதில் பொலிஸ்மா அதிபருக்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் உத்தரவு


இந்த அவதனிப்புக்கள், பரிந்துரைகளின் பிரதிகள், கடந்த‌ 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி ருஷ்திக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்துவது உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்புதல்.- Vidivelli

No comments

Powered by Blogger.