Header Ads



சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலையானமை அம்பலம்


ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உப்புல்தெனிய, இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 


அதற்கமைய, அவரை ஜூன் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 


இதேவேளை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ், வெசாக் பௌர்ணமி தினத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியல்ல, மூன்று கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.

No comments

Powered by Blogger.