Header Ads



எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் பாதாள உலகக் கும்பல்களுக்கும் தொடர்பு


எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் பல பாதாள உலகக் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகள் இருப்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


இன்றைய -09- நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அவர்களில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன் ஒன்பது வேட்பாளர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) எட்டு வேட்பாளர்கள், மக்கள் கூட்டணியின் நான்கு வேட்பாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூன்று வேட்பாளர்கள் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் ஒரு வேட்பாளர் ஆகியோர் அடங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சமீபத்திய கொலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.


அதன்போது, தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, அரசாங்கம் பாதாள உலகக் கும்பல்களை ஒழிக்கும் என்று கூறினார், ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை," என்று தயாசிறி குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.