கேரளாவில் முஸ்லிம் இளைஞன் அடித்துக் கொலை
வெளியாகியுள்ள தகவலின்படி, கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பத்ர கல்லூர்த்தி ஆலயத்தின் அருகில் இந்த துயரச்ம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அரங்கேறியுள்ளது.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட 19 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் சச்சின், தேவதாஸ், தீக்ஷித், சாய்தீப், நடேஷ், மஞ்சுநாத், சந்தீப், விவியன் ஐவரிஷ், ஸ்ரீதத்த, ராகுல், பிரதீப் குமார், மனிஷ், தனுஷ், மற்றொரு தீக்ஷித், மற்றும் கிஷோர் ஆவர். இந்த இளைஞர் கும்பல் வன்முறையால்தான் கொல்லப்பட்டார் என்பதை கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பத்து அணிகள் பங்கேற்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதலில் சச்சின் என்பவருக்கும் உயிரிழந்த அஷ்ரஃபிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் இது கட்டுக்கடங்காத கும்பல் தாக்குதலாக உருவெடுத்தது. சில நல்ல மனிதர்கள் வன்முறையாளர்களை தடுக்க முயன்றபோதும், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
கொடூரமான குற்றவாளிகள் அந்த இளைஞரை சரமாரியாக எட்டி மிதித்தும், தடியால் அடித்தும் வெறி தீர்த்துள்ளனர்.
பின்னர், மாலை ஐந்து முப்பது மணியளவில் அந்த இளைஞர் ஆலயத்தின் அருகே உயிரற்ற உடலாக கண்டெடுக்கப்பட்டார். கடுமையான தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட உள் இரத்தப்பெருக்கே அவரது மரணத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. அவரது வயிறு, முதுகு மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் கொடிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவ அறிக்கையின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இளைஞர் உயிரிழந்ததை உறுதி செய்தவுடன், குற்றவாளிகள் அவரது உடலை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
Post a Comment