காசாவின் அவலங்களை உலகிற்கு சொல்லிய, ஒரு உயிர் குடும்பத்தினருடன் அழிக்கப்பட்டது

பாலஸ்தீன எழுத்தாளரும், புகைப்பட பத்திரிகையாளருமான பாத்திமா ஹசௌனா அவரது குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 9 உறுப்பினர்களுடன் இன்று காலை (16) புதன்கிழமை, காலை, காசா நகரில் உள்ள அவர்களது வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்தின் துன்பங்களை உலகிற்கு எடுத்துரைத்து, மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் நபர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றனர்.
ஆம், காசாவின் அவலங்களை செய்திகளாகவும், படங்களாகவும் உலகிற்கு சொல்லிய ஒரு உயிர் உலகிலிருந்து அழிக்கப்பட்டுள்ளது. அவருக்காகவும், அவரின் குடும்பத்திற்காகவும் பிரார்த்திப்போம்.
Post a Comment