ஞானசார தேரருக்கு எதிராக CID யில் முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை விசாரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவரின் கருத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தாம் வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு நேற்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
Post a Comment