Header Ads



ஆயிரக்கணக்கானோர் நெகிழ்ந்த தருணம்


இவர்கள் மூன்று பேரும் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள்..

ஹாஃபிழ் சபீர் அலி 

ஹாஃபிழ் உமருல் அக்ரம் 

ஹாஃபிழ் ஸினான் 

இந்தியா - கேரளா  மலப்புறம் மஅதின் அகாடமியின் 

தஃபீளுல் குர்ஆன் கல்லூரியில் பிரெய்லி முறையில் திருமறை மனனம் செய்து ஹாஃபிழ் ஸனது பெற்றவர்கள்...

மஅதின் கிராண்ட் மஸ்ஜிதில்  ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முதல் வாரம் ஜும்மாவின் அனைத்து விஷயங்களும் மாற்றுத்திறனாளிகளை வைத்து நடத்துவதை பல வருடங்களாக வழக்கமாக கொண்டுள்ளனர்.


அதேபோல் இந்த வார ஜும்மா தொழுகைக்கு பாங்கு ஒலித்து மஆஸிர் சொன்னது ஹாஃபிழ் உமருல் அக்ரம், ஜும்மா பயான் ஹாஃபிழ் ஸினானும்,  ஹாஃபிழ் சபீர் அலி குத்பா ஓதி தொழுகையும் நடத்தியதை குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் நெகிழ்வான தருணங்கள்..


மஅதின் கல்வி நிறுவனங்கள் சேர்மன் மவுலானா சையத் கலீலுல் புகாரி தங்களின் மார்க்க கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை அரவணைத்து ஆதரவளிக்கும் செயல் போற்றுதலுக்குரியது.


Colachel Azheem

No comments

Powered by Blogger.