Header Ads



இருந்தால் அள்ளி வழங்குங்கள் - அல்லாஹ் தாராளமாக தருவான்


இந்தியா - திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியில் ரமலான் துவங்கிய நாள் முதல் தினமும் மாலையில் இந்த காட்சிகள்.. கேரள மாநிலம் முழுவதும் பல இடங்களில் இயங்கி வரும் ஸம்ஸம் உணவகங்களில் நோன்பு துறக்க வசதிகள் உண்டு..


அதுபோல நந்தன்கோடு கிளையில் இஃப்தார் நேரம் பழங்கள் ஜுஸ் வழங்கியதை யாரோ ஒருவர் பதிவு செய்த வீடியோ  இணையத்தில் உலாவர இப்போது தினமும் 500க்கு அதிகமானோர் அங்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாங்கி நோன்பு துறக்கின்றனர்..


முஸ்லிம்கள் அல்லாத நபர்களும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நாள்தோறும் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதும் ஸம்ஸம் ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகன்களும் வரும் அனைவருக்கும் பழங்கள், ஜுஸ் வழங்கி வருகின்றனர்..


அதுபோல தினமும் அதிகாலையில் வழங்கும் ஷஹர் உணவு பார்சல் வாங்கவும் நந்தன்கோடு கிளையில் நூற்றுக்கணக்கானவர்கள் நகரின் பல பகுதிகளில் இருந்தும் வந்து வாங்கி செல்கின்றனர்...


திருவனந்தபுரம் பட்டம் பிலாமூடு ஜங்ஷன் மசூதியில் ரமலான் மாதம் நோன்பு துறக்கும் ஏற்பாடு முழுவதும் ஸம்ஸம் ஹோட்டல் உரிமையாளரே பல வருடங்களாக நிர்வகித்து வருகிறார் என்பதும் அந்த மசூதியின் இமாம், ஊழியர்கள் மாத சம்பளம், மின்கட்டணம் உட்பட பராமரிப்பு முழுவதும் அவரே வழங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது...


வெளியே தெரிந்தும் தெரியாமலும் தங்கள் வருமானத்தில் ஏராளம் நன்மையான காரியங்களை செய்து வரும் ஸம்ஸம் குரூப் வளர இறைவன் அருள் புரிவானாக...


Colachel Azheem

No comments

Powered by Blogger.