Header Ads



பாஸ்போர்ட் பற்றிய அறிவிப்பு


ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு மாத்திரம் 24 மணி நேர சேவை செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி வரை மாத்திரம் பதிவு செய்யலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பதில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.