காசாவில் இருந்து மக்களை வெளியேற்ற தயாராகுமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவு
காசாவில் இருந்து வெகுஜன வெளியேற்றத்திற்கு தயார்படுத்துமாறு இராணுவத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு மந்திரி அலுவலகத்தின் அறிக்கையின்படி, காஸாவில் வசிக்கும் எவரும் தங்களை உள்வாங்கிக்கொள்ள ஒப்புக்கொள்ளும் எந்த இடத்திற்கும் குடிபெயரக்கூடிய திட்டத்தை தயார் செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு இஸ்ரேல் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்பின் "தைரியமான திட்டம், காசாவில் உள்ள பரந்த அளவிலான மக்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் செல்ல உதவும்" என்று அமைச்சர் பாராட்டியதாக காட்ஸின் அலுவலகம் மேற்கோளிட்டுள்ளது.
காசாவை விட்டு வெளியேறும் மக்களை ஹமாஸ் "தடுத்து" அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் காட்ஸ் குற்றம் சாட்டினார்.
"உலகம் எங்கும் நடைமுறையில் உள்ளதைப் போல, காசாவில் வசிப்பவர்கள் வெளியேறவும் குடியேறவும் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று காட்ஸ் கூறினார்.

Post a Comment