Header Ads



ஜனாஸா எரித்தமையை விசாரிக்க, பாராளுமன்ற குழுவை நியமிக்க வலியுறுத்தும் விவாதம் - சகல முஸ்லிம் Mp க்களும் பங்கேற்க வேண்டும்


பாராளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.


பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் அவர்களால் கொண்டுவரப்படும், கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை என்பன குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.



No comments

Powered by Blogger.