விரைவில் பங்காளிகளாக மாறுவோம்
ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றதை எடுத்துக்காட்டியே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் தமது பங்காளிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் ஏனைய கட்சிகளுடனும் தமது கட்சி பேச்சு நடத்தும் என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த பல தேர்தலிலும் தனித்துப்போட்டியிட்டு வந்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தோல்வியின் பாதையில் சென்றதை அடுத்தே ஒன்றிணையும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Post a Comment