சாம்பியனாகியது பலகத்துறை அல் பலாஹ் கல்லூரி
பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதிற்குட்பட்ட அகில இலங்கை சமபோசா உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் நீர் கொழும்பு வலய போட்டித் தொடரின் சாம்பியனாக அல் - பலாஹ் கல்லூரி முடி சூடிக் கொண்டது.
நேற்றைய தினம் நடைபெற்ற குழுநிலை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் காலிறுதிப் போட்டிக்கு தெரிவான அல் பலாஹ் அணி காலிறுதியில் இன்று ஹரிஸ்சந்திர அணியினை 3:2 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதிப் போட்டியில் பிடிப்பன செ. மேரிஸ் அணியினை 3:0 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு மரிஸ்டெல்லா அணியினை 3:2 என்ற கோல் கணக்கில் பெனல்டி முறை மூலமாக வென்று. நீர் கொழும்பு வலய சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது அல் பலாஹ் கல்லூரியின் 14 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணி.
குறித்த அணி வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
ஊடகப்பிரிவு அல் பலாஹ் பழைய மாணவர் சங்கம்.
Post a Comment