Header Ads



பிறப்பு வீதம் குறைவுக்கு மகிந்த, ரணில் ஆகியோரும் காரணமா..??


கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.


புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதும் குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றில் உரையாற்றிய போது பிரதி அமைச்சர் நளின் ஹேவகே இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 


கடந்த சில தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பொருளாதார நிலைமைகளினால் இந்த நிலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதிகளாக மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் உருவாக்கப்பட்ட பொருளாதாரம் காரணமாக இன்று நாட்டில் பிள்ளைகள் பிறக்கும் வீதம் குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.