Header Ads



3 ஆடுகளுடன் சென்றவர், நீதிமன்றத்தில் நிறுத்தம்


மட்டக்களப்பு எறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவர் மிருகவதை குற்றச்சாட்டில்  திங்கட்கிழமை(10) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


செங்கலடியில் இறைச்சிக்காக 3 ஆடுகளை வாங்கி அதனை மரப்பெட்டி ஒன்றில் கட்டி அடைத்துக்கொண்டு மோட்டர் சைக்கிள் ஒன்றில் ஏறாவூருக்கு எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் போது  55 வயதுடைய ஏறாவூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்துள்ளதுடன் , 3 ஆடுகள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும்  மீட்டுள்ளனர் .


கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


சரவணன்

No comments

Powered by Blogger.