ஐரோப்பிய நாட்டு கனவுடன் சென்று, பன்றிக் கூடுகளில் வேலைசெய்யும் இலங்கையர்கள்
106 இலங்கையர்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் 12 இலட்சம் ரூபாவை செலுத்தி லிதுவேனியாவிற்கு சென்றுள்ளனர் .
அங்கு சென்ற பிறகு இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதிகள் வேலை வழங்கப்பட்டதாகவும் , மற்றையவர்கள் பன்றிக் கூடுகளில் வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் தெரிவித்தார் .
அதேவேளை இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குடியிருப்பு விசாக்களை லிதுவேனியா அரசு ரத்து செய்ததுள்ளதுடன் ஒரு நாளைக்கு 10 யூரோக்கள் செலவழித்து இவர்களுக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளனர் .
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இருவர் மாத்திரம் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் .
லிதுவேனியாவிலிருந்து இலங்கை வர இதுவரை சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அவர்களுடைய வீடுகளை அடகு வைத்து இந்தப் பணத்தைச் செலவிட்டதாகவும் நாடு திரும்பியவர் கவலை வெளியிட்டுள்ளார்.
Post a Comment