Header Ads



நான் கைவைத்த காரியங்கள் தோல்வியில் முடிந்ததில்லை


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை  நிச்சயம் மீட்டெடுப்பேன் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,


"நான் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் பதில் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.


கட்சியில் உறுப்புரிமை இருப்பதால்தான் பதில் தலைவராகியுள்ளேன். கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன்.


நான் கைவைத்த காரியங்கள் தோல்வியில் முடிந்ததில்லை. தற்போதைய அரசில் பல கட்சிகள் உள்ளன. எனவே, சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.


புதிய பதவியை ஏற்றுள்ளதால் அமைச்சுப் பதவி பறிபோகும் என நம்பவில்லை" என்றார்.   

No comments

Powered by Blogger.