Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தில் இப்படியும் சம்பவங்கள்


கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வங்கி அமைந்துள்ள பகுதியில் பணப் பரிமாற்றம் செய்யும் போர்வையில் சுற்றித் திரிந்து பயணிகளின் பயணப்பொதிகளை திருடும் தம்பதியை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் களனி, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண் மற்றும் 35 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.


தனது மனைவியின் கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தம்பதி வருகை தருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வங்கிப் பகுதிக்கு வருகைத்தந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொருட்களை வைத்துவிட்டு, வெளிநாட்டு நாணயத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றும் போது, ​​அவர்களின் கவனம் பணப் பரிமாற்றத்தின் மீது திரும்பும் வரை காத்திருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.