Header Ads



இலக்குகளில் ஒன்றையேனும் ரணில், ராஜபக்ச அரசாங்கத்தினால் அடைய முடியவில்லை


பல்வேறு பத்திரிகைகளில் சாதகமான செய்திகள் வெளிவந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூலம் எதிர்பார்த்த இலக்குகளில் ஒன்றையேனும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கத்தினால் அடைய முடியவில்லை. 


பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்பது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் பல்வேறு கருத்துக்களில் வெளிப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.


கடனில் ஒரு தொகையை கழித்தல் (Haircut), வட்டி வீதத்தை குறைத்தல், மீள் செலுத்தும் கால நீடிப்பு என்ற இந்த மூன்று இலக்குகளும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் அடையப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இவற்றில் ஒன்றேனும் கூட தற்போதைய அரசாங்கத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கீர் மாக்கார் சுட்டிக்காட்டினார். 


பேருவளை பிரதேசத்தில் (23)  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.