ஈரானின் புரட்சிகர காவலர் படையை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க கோரிக்கை
ஈரானின் புரட்சிகர காவலர் படையை ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத குழுக்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
"ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை EU பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நீண்ட கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றினர்,
அதே பட்டியலில் லெபனான் குழுவான ஹெஸ்பொல்லாவை சேர்க்க ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் ஆகியோரையும் ஐரோப்பிய பாராளுமன்றம் கேட்டுக் கொண்டது.
Post a Comment