Header Ads



மட்டக்களப்பு வாவிக் கரையில் சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு தலைமையக பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவிக்கரை வீதியில் சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பதில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி.ராஜித தெரிவித்தார்.


மட்டக்களப்பு வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் வீதியால் வந்து கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவரிடம் தெரிவித்ததையடுத்து குறித்த சட்டத்தரணி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த இடத்திற்கு அருகிலுள்ள பற்றைக்குள் இருந்து மற்றொரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரிகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.