நேர்வழி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருட்கொடையாக கிடைப்பது...!
- ஹைதர் அலி -
நேர்வழி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருட்கொடையாக கிடைப்பது...!
நம் கண் முன்னே நிறைய உதாரணங்கள் இருக்கிறது.
அல்லாஹ் நேர்வழியின் பக்கம் இதயத்தை புரட்டி விட்டால் ஆபாச பொருளாக காட்சியளித்தவர்கள் கண்ணியமாக நமக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு போராட்ட முன்மாதிரிகளாக மாறி விடுவார்கள்.
நபி (ﷺ) அவர்கள், "ஆதமுடைய மக்களின் உள்ளங்களை அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் புரட்டுகிறான்" என்று கூறிவிட்டு,
அல்லாஹும்ம முஸர்ரிப(எ)ல் குலூபி(இ) ஸர்ரிப்(எ) குலூப(இ)னா அலா தாஅ(த்)தி(க்)க.
"இறைவா! உள்ளங்களைப் புரட்டுகின்றவனே!
எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் புரட்டுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 5161.
Post a Comment