Header Ads



மைத்திரி விளையாடிய விளையாட்டு


இன்னும் ​சொற்ப நேரத்தில் ஆரம்பிக்கவிருக்கும் இலங்கை ​கிரிக்கெட் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வெற்றிப்பெற வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றார். இதன்போதே வாழ்த்து தெரிவித்தார்.


தற்போது என்ன விவாதம் நடைபெற்றாலும், இன்றைய போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினரின் மனதை வலுப்படுத்த வேண்டும் என்றார்.


தான் கிரிக்கெட் விளையாடவில்லை என்று தெரிவித்த அவர், எல்லே விளையாட்டையே தான் விளையாடியதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.