அதிர்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய எதிர்ப்பாளனின் வெற்றி - குர்ஆன் தடை தற்காலிக நிறுத்தம், பள்ளிவாசல் மத்ரசாக்கள் தடைகளை பிரிட்ஜில் வைப்பதாக அறிவிப்பு
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக அங்கம் வகித்த பிறகு, அவரது சுதந்திரக் கட்சி (பிவிவி) 37 இடங்களைத் தற்போது வெல்ல உள்ளது. இது, அவரது நெருங்கிய போட்டியாளரான இடதுசாரி கூட்டணி பெற்ற இடங்களைவிட அதிகமான இடங்களாகும்.
"பிவிவியை இனி புறக்கணிக்க முடியாது, நாங்கள் ஆட்சி செய்வோம்”, என அவர் கூறினார்.
அவரது வெற்றி டச்சு அரசியலை உலுக்கியது மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுபது வயதான வைல்டர்ஸ், மற்ற நாட்டினர் நெதர்லாந்துக்கு இடம் பெயர்வது பற்றி மக்களுக்கு இருந்த கோபத்தைச் சரியாகப் பயன்படுத்தி “எல்லைகள் மூடப்பட்டுவிட்டன” என்னும் தேர்தல் வாக்குறுதியை அளித்தார். ஆனால், குர்ஆனை தடை செய்வதாக அவர் அளித்த வாக்குறுதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
அவர் தனது வெற்றி உரையில் போராட்ட மனநிலையில் இருந்தார். அவர் பேசுகையில், "நாங்கள் ஆட்சி செய்ய விரும்புகிறோம்... நாங்கள் ஆட்சி செய்வோம். நாங்கள் பெற்ற இடங்கள் ஒரு மகத்தான ஊக்கம். ஆனால் அதுவொரு மகத்தான பொறுப்பும்கூட,” எனத் தெரிவித்தார்.
டச்சு ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாக உறுதியளித்து, வைல்டர்ஸ் தலைமையிலான அரசாங்கத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். "நெதர்லாந்திற்கு இடம்பெயர்ந்த யாரையும் வெளியேற விடமாட்டோம். நெதர்லாந்தில் அனைவரும் சமம்," என்று அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.
வைல்டர்ஸ் தனது அரசியல் போட்டியாளர்களுக்கு ஒன்றிணைந்து செயல்படலாம் என நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.
வைல்டர்ஸின் வெற்றி ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பும். ஏனெனில் நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒன்று.
ஐரோப்பா முழுவதும் உள்ள தேசியவாத மற்றும் தீவிர வலதுசாரி தலைவர்கள் அவரது சாதனையைப் பாராட்டியுள்ளார்கள். பிரான்சில், தேசிய பேரணியின் தலைவர் மரைன் லு பென், "தேசிய அடையாளங்களைப் பாதுகாப்பது குறித்துப் பெருகி வரும் ஆதரவை இது உறுதிப்படுத்துகிறது," என்றார்.
வைல்டர்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு "நெக்சிட்" என்று அழைக்கப்படும் பொது வாக்கெடுப்பை நடத்த விரும்புகிறார். இருப்பினும் அவ்வாறு செய்வதற்கான தேசிய மனநிலை இல்லை என்பதை அவர் அங்கீகரிக்கிறார். எந்தவொரு பெரிய கட்சி வரும் காலத்தில் தன்னோடு கூட்டணி வைத்தாலும் அவர்களை நெக்சிட்டிற்கு ஆதராவாக வாக்களிக்க வைக்க அவர் சிரமப்பட வேண்டியிருக்கும்.
வாக்குப் பதிவுக்கு முன்னதாக அவர் தனது இஸ்லாமிய எதிர்ப்பு சொல்லாட்சியைக் குறைத்துக் கொண்டார். இந்த நேரத்தில் அதிக அழுத்தமான பிரச்னைகள் இருப்பதாகவும், மசூதிகள் மற்றும் இஸ்லாமிய பள்ளிகளைத் தடை செய்வது குறித்த தனது கொள்கைகளை "ஃபிரிட்ஜில் வைக்க" அவர் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்த வியூகம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அவரது பிவிவி கட்சியின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.
பிரசாரத்தின் போது வைல்டர்ஸ் முந்தைய அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டார்.

Post a Comment