Header Ads



மரண அடி விழுந்துள்ளது


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கு மரண அடி என்று அவர் கூறியுள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.


"ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்தவும் முடியாது, தாமதிக்கவும் முடியாது. 2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும்." என்றார்.

No comments

Powered by Blogger.