நெதன்யாஹுவை பதவி விலகக் கோரி அவரது இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய ஜெருசலேமில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை பதவி விலகக் கோரி அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். மேலும் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களுக்காக அவர்கள் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
"கஃபர் அஸாவில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?" ஹமாஸால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலிய சமூகங்களில் ஒன்றைக் குறிப்பிட்டு எதிர்ப்பாளர்களை கோஷமிட்டனர்.

Post a Comment