Header Ads



24 மணி நேரத்தில் 3 அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஹமாஸின் தாக்குதலும் தொடருகிறது


காசா நகரை சுற்றி வளைக்க முயற்சிக்கும் இஸ்ரேல் துருப்புக்கள் மீது ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


காசா மீது இஸ்ரேலின் கடுமையான குண்டுவீச்சு தீவிரமடைந்துள்ளது, குறிப்பாக வடக்கில் பல பொதுமக்கள் சிக்கித் தப்பி ஓட முடியாமல் உள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் மூன்று அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 9,770 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.