இஸ்ரேலுக்கு எதிராக Operation Al-Aqsa Flood என்ற பெயரில், ஹமாஸ் யுத்தப் பிரகடனம் - சிலரை பிணைக் கைதிகளாகவும் பிடித்தனர்
இஸ்ரேலுக்கு எதிரான the start of Operation Al-Aqsa Flood against Israel. ஹமாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து காஸா பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இஸ்ரேலிய இராணுவ வானொலியும் காசாவில் இருந்து பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் "ஊடுருவியது" என்று தெரிவிக்கிறது.
பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகப் பிடிக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
காசாவின் ராக்கெட்டுகளால் ஏற்பட்ட சில சேதங்களைக் காட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன
அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு அதன் வேலையைச் செய்யத் தவறிவிட்டது.
பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை கைப்பற்றி காஸாவிற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment