Header Ads



கை துண்டிக்கப்பட்ட வைஷாலி, மீண்டும் பாடசாலை திரும்பினார் - மகிழ்ச்சியுடன் வரவேற்ற சக தோழிகள்


யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ர்சைகளை  ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக  கூறப்படுகின்றது.


  சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகத்தினர் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.


காச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி மருத்துவமனையில் ஏற்பட்ட தவறினால்   இடது கை மணிக்கட்டுடன் மாணவியின் கை அகற்றப்பட்ட நிலையில் அந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.