Header Ads



பகினிகஹவெல முஸ்லிம் கல்லூரியிலிருந்து முதன்முறையாக வைத்திய பீடத்திற்கு தெரிவு


மொ பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியிலிருந்து முதன்முறையாக  வைத்திய பீடத்திற்கு தெரிவு


க.பொ.த(உ/த)  பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில்  முஸ்லிம் மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் முபாரக் அவர்களின் புதல்வி பர்ஹத் பஹ்னா இம்முறை இடம் பெற்ற க.பொ.த.உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்  பரீட்சைக்கு தோற்றி இரண்டு A மற்றும்  ஒரு C சித்திகளையும் எம்.என். நிஸ்லா இரண்டு A மற்றும் C சித்திகளையும் எம்.டி சாதிகா A மற்றும் இரண்டு C பெற்று   மொணராகலை மாவட்டத்தில் முதல் வைத்திய பீடத்திற்கு  தெரிவாகி மொணராகலை மாவட்டத்திற்கும் மெதகமை பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதோடு

 

பௌதீக விஞ்ஞான பிரிவில் தோற்றிய மாணவர்களான எம்.ஆர் ரிம்னாத் தலா ஒரு A மற்றும் B,C பெற்றுள்ளார். மேலும் எம் அப்வான் ஒரு A, இரண்டு C களையும்  நௌபர்தீன் மூன்று B களை பெற்று  பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

மேலும் வணிக பிரிவில் பஸ்ல் ரஹ்மான் ஒரு A மற்றும் இரண்டு B களையும் பெற்றுள்ளதோடு  கலைப்பிரிவில் ரிஸ்தா இரண்டு A,  ஒரு B , இஸ்ஸதுல் பஸ்னா இரண்டு A,  ஒரு B , மற்றும்  சம்ஹா , சிறாஜ் ஆகிய மாணவர்கள் ஒரு A,இரண்டு B பெற்று பல்கலைக்கழகம்  நுழைய வாய்ப்பினை பெற்றுள்ளனர்.மேலும்  எமது பாடசாலை மற்றும் எமது ஊரிற்கு பெருமை தேடித்தந்த மாணவச்செல்வங்களுக்கு  வாழ்த்துக்கள்.


தகவல் 

ஏ.எச்.எம்சிஹார்

No comments

Powered by Blogger.