Header Ads



மோடிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கவா, இலங்கையணி தோல்வியடைந்தது..?


கொழும்பில் நேற்று (17.09.2023) நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தொடர்பில் அரசியல் உள்ளதா என விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, இன்று -18- செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியின்போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கையின் தோல்வி, நேற்று தமது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டதா என்ற சந்தேகத்தை அவர் இதன்போது எழுப்பியுள்ளார்.


இந்தப்போட்டியில் தீவிரப்போட்டி ஒன்றை அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால சில மணிநேரங்களில் அது முடிந்து விட்டது. இது இலங்கை வீரர்களின் மன உறுதியை பாதிக்கும் என்ற நிலையில், தோல்வியில் அரசியல் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பு விளையாட்டுத்துறை அமைச்சிடம் வழங்கப்பட வேண்டுமா என வினவியபோது அதற்கு பதிலளித்த திஸ்ஸ அத்தநாயக்க, வடக்கில் புதிய மைதானம் அமைக்க நிதியொதுக்கியபோதும், அது அமைக்கப்படாத நிலையில், இந்த விசாரணையை அந்த அமைச்சரிடம் கையளிக்கமுடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.