Header Ads



சூட்கேஸில் இருந்த சடலம்


- Ismathul Rahuman -


 சீதுவ, தண்டுகம் ஓயாவின் அருகில் பயணப் பையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.


     சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 15ம் திகதி மாலை அங்கு சென்று பார்த்தபோது  நீல நிற பயணப் பையின் உள்ளே சடலமொன்று இருப்பது தெரியவந்தது.


    சடலமாக மீட்கப்பட்டவர் சில தினங்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


   அவர் சிவப்பு நிற சேர்ட்டும், சாம்பல் நிற நீண்ட காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


       சடலத்தின் தலையின் இரு இடங்களிலும் கன்னத்திலும் காயங்கள் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


   சடலம் பிரேத பரிசோதனைக்காக  தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.