Header Ads



மீள் திருத்தம், பற்றிய அறிவிப்பு


2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (07) முதல் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும்.


இந்த நிலையில், எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அதாவது, கடந்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மாத்திரமே எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மீண்டும் பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.