Header Ads



தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் குழு


பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்திற்கு சேதம் விளைவித்த இளைஞர்கள் குழு பிடிபட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நிர்வாகம் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து நடவடிக்கை எடுத்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.


ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பரிதாபகரமானது என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


“இந்த பொதுச் சொத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். இருப்பினும், தாமரை கோபுரத்தின் சுவர்கள் மற்றும் இரும்பு வேலிகளை சேதப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.