Header Ads



ரணில் ஜனாதிபதியானதும் செய்த கூடாத வேலை


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்றதன் பின்னர் 250 முதல் 300 வரையிலான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று -09- தெரிவித்துள்ளார்.


புதிய பந்தயம் மற்றும் கேமிங் லெவி (திருத்தம்) சட்டமூலம் நாட்டில் உள்ள சூதாட்ட விடுதிகளுக்கு ஏற்கனவே உள்ள நான்கு உரிமங்களைத் தவிர வரம்பற்ற எண்ணிக்கையிலான உரிமங்களை வழங்க அனுமதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பந்தயம் மற்றும் கேமிங் லெவி (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


சிங்கப்பூரில் இரண்டு சூதாட்ட விடுதிகள் மட்டுமே உள்ளன, மலேசியாவில் ஒரே ஒரு சூதாட்ட விடுதி மட்டுமே உள்ளது.


“புதிய பந்தயம் மற்றும் கேமிங் லெவி (திருத்தம்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாட்டில் வரம்பற்ற சூதாட்ட விடுதிகள் நிறுவப்படும். இது ஒரு தீவிரமான சூழ்நிலை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.