Header Ads



நாமலின் திருமணத்திற்கான மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லையா..?


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபை விநியோகித்த மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.


மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கை மின்சார சபை இந்த தகவலை வழங்கியுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கிய இந்த தற்காலிக மின் விநியோகித்திற்காக 26 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை, நளின் ஹேவகேவுக்கு வழங்கியுள்ள பதிலில் தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய கடந்த 2019 ஆண்டு 9 ஆம் மாதம் 15 ஆம் திகதி வீரகெட்டிய வீட்டில் நடந்த வைபவத்திற்கு வழங்கிய தற்காலிக மின் விநியோகத்திற்காக 26 லட்சத்து 82 ஆயிரத்து 246.57 ரூபா செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.


2


மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை மின்சார சபையிடம் விளக்கம் கோரியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் குறித்த துல்லியமான விவரங்களைத் தமக்கு வழங்குமாறும், அது உண்மையான ஆவணமாக இருந்தால் அதற்குத் தகுந்த பதிலை அளிக்குமாறும் இலங்கை மின்சார சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபை விநியோகித்த மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்திருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை மின்சார சபை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

No comments

Powered by Blogger.