Header Ads



யானைகளுக்கு உணவு வழங்கினால் என்ன செய்வார்கள் தெரியுமா..?


வனப்பகுதியில் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


இது தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


வனப்பகுதி ஊடான வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்களால் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு அளிப்பதால், விலங்குகள் வீதிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.


இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறாக யானைகள் உணவு பெறும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி பதிவாகின.


எனவே, காடுகளை அண்டிய வீதிகளில் பயணிக்கும் போது வன விலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.


No comments

Powered by Blogger.