Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் டலஸ்...?


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிருத்த பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி, சுதந்திர ஜனதா சபை தனக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தயார் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஊழலற்றவர், அவர் நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமானவர் எனவும், எனவே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சுதந்திர மக்கள் பேரவை மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை கட்டியெழுப்பியுள்ளதாகவும், அதற்கேற்ப நாட்டில் ஊழல் மோசடிகளை தடுக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்ற தயாராகவுள்ளதாகவும் லலித் எல்லாவல எம்.பி நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.