2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும், நாட்டை காட்டி பிச்சை எடுக்கும் தலைவர்கள்
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாகவும், நாட்டை காட்டி பிச்சை எடுக்கும் தலைவர்கள் கூட்டம் நாட்டில் இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய வரட்சியைக் கூட தற்போதைய ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாது.
இந்த பொருளாதார நெருக்கடி தொடருமானால் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும்.
மக்களுக்கு ஜனாதிபதி பொய்யான கனவுகளை காட்ட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2048 இலங்கையின் பொருளாதரம் முன்னேற்றமடையும் என இலங்கைச்சனாதிபதி ரணில் கூறும் போது கத்தோலிக்க மதத் தலைவர் 2048 ஆண்டாகும் போது பொருளாதாரம் முற்றாக நலிவடைந்து நாடு முற்றாக அழிந்துவிடும் எனக்கூறும் போது நாம் நம்பவேண்டியது அரசியல் வாதியை அல்ல, மதத்தலைவரின் கருத்தை என்பது இந்த நாட்டின் அத்தனை மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
ReplyDelete