Header Ads



பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்


கொழும்பிலிருந்து பயணித்த பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவம் இன்று (30.07.2023) காலை இடம்பெற்றுள்ளது.


இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றே இன்று காலை 5 மணியளவில் வீதியில் கவிழ்ந்துள்ளது.


சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.