Header Ads



பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியவரின் விபரீதமான முடிவு


காலி - கராபிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனா்.


அந்த முச்சக்கரவண்டியின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், இன்று (24) காலை பியதிகம பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு அருகில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தலையை வைத்து அவா் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.


குறித்த நபர் சுமார் 31 வயதுடையவர் எனவும் ஹபுகல, வக்வெல்ல பிரதேசத்தை சோ்ந்தவா் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.

No comments

Powered by Blogger.