Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அல்ஹாஜ் அப்துல் காதர் ரஷாத்

 
அஸ்ஸலாமு அலைக்கும் 


ஜனாஸா அறிவித்தல் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்       கல்கிசை சென்மேரிஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் அப்துல் காதர் ரஷாத் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


இவர் யாழ்.மத்திய கல்லூரி, நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஆவார். 

அன்னார் மர்ஹூம்களான அல்ஹாஜ் அப்துல் காதர் (யாழ். மஸ்ற உத்தின் பாடசாலை அதிபர் - பெரிய வாத்தியார், யாழ்ப்பாண மாவட்ட ஹாதியாரும்) ஸப்ரா உம்மாவின் அன்பு மகனும் ஆவார். 


இவர் ஹாஜியானி பதீனாவின் அன்புக் கணவரும். மசூரா (ILMA International School- Teacher) இஸ்ரத் ஆகியோரின் அன்புத் தந்தையும், சட்டத்தரணி அஸ்லம், கபீலா ஆகியோரின் மாமனாரும், ஹாஜியானி ரிப்கா காதர் (முன்னாள் யாழ். கதீஜா கல்லூரி, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி, ILMA International School-Teacher) ஹாஜியானி ரைஸா நிலாம் ( D.S.Senanayake   College -Teacher) மர்ஹூம்களான ஹாஜியானி  ரைஹானா மன்சூர், அல்ஹாஜ் ரஸீன் (New    Selection) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 


அன்னாரின் ஜனாஸா  இன்று (30-05-2023) தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் அஸர் தொழுகையுடன்  நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் - மருமகன்

0777314360



No comments

Powered by Blogger.