Header Ads



பெண்கள் குளிக்கும் போது, வீடியோ எடுத்தவர் கைது


குளியலறையின் கதவின் ஒரு துளை வழியாக இளம் பெண்கள் குளிக்கும் காட்சிகளை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்த பீப்பிங் டாம் (Peeping Tom) ஒருவர், மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மே 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


சந்தேக நபர், கட்டுநாயக்கவில் பெண் ஆடைத் தொழிலாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட விடுதியில் தங்கியிருந்த பண்டாரகம பகுதியைச் சேர்ந்த ஆண் ஆடைத் தொழிலாளி ஆவார்.


தங்கும் விடுதியில் உள்ள தனி குளியலறையில் பெண் ஆடைத் தொழிலாளர்கள் குளிக்கும் காட்சிகளை அவர் வீடியோ படம் பிடித்தது விசாரணையில் தெரியவந்தது.


பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பல இளம் பெண்களின் குளியலறைக் காட்சிகள் உள்ளதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் மனநல மருத்துவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி மே 29 ஆம் திகதி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

1 comment:

  1. இந்தவகை மனநோய்களுக்கு குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் சிறந்த மருந்து இருக்கின்றது. இவருக்கு காலை சாப்பாட்டைக் கொடுத்து ஒரு கன்னத்துக்கு 25 என்றவகையில் இரண்டு கன்னங்களுக்கும் ஒரு நாளைக்கு காலை 50 மாலை 50 கன்னத்துக்கு செம்மையாக முகத்தில் சிகப்பு அடையாளம் தங்கும் வகையில் இரண்டு வாரத்துக்கு தொடர்ந்து ஒருநாள் தவறாமல் மருந்து கொடுத்தால் அந்த மனநோய் அப்படியே மறைந்து விடும். அந்த மருந்தைக் கொடுக்கும் போது குறைந்த பட்சம் 20-35 வயதுக்குற்பட்ட 50 நபராவது பார்த்துக் கொண்டிருப்பது கட்டாயமாகும். அதன் மூலம் மாத்திரம் இந்த நோய் பரவாமல் தடுக்கலாம். இது சர்வதேச மட்டத்தில் பரீட்சித்து கைகண்ட மருந்து.

    ReplyDelete

Powered by Blogger.